Sunday 16 February 2014

இருவர் இணைந்ததால்,
உண்டான மென்மையே
உனக்கு ஈடு இணையில்லை
இது உண்மையே!
நீ வன்மையானால்
உண்டாகும் காயமே!!
உன் மென்மைதான் என்றும் மாயமே!!
ஆவி பறக்க உன்னை மெய்யால் 
தழுவாமல், நெய்யால் தழுவிஉண்டால் 
நாவில் ருசி கூடுமே!
வயிற்றின் பசி ஓடுமே!!
உன் மென்மையை எதற்கு ஈடென்பேன்?
என் வெள்ளை தேவதையே!!
உள்ளம் கவர் இட்லியே!
சரியான துணை சேர்ந்தால்
உன் சுவை பெருகுமே!  அதுபோல் 
இதமான துணை நமக்கு கிடைத்தால்
வாழ்வே சுவைக்குமே 
என் உள்ளம்கவர் இட்லியே !!
வாழ்க நீயே!!

No comments:

Post a Comment